தஞ்சாவூரில் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வளர்ப்போம்! மொழிப்போர் தியாகிகள் தினத்தில் இடதுசாரிகள் பொது மடை சார்பில் உறுதிமொழி!
தஞ்சாவூர். மாவட்டம் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை உயர்த்தி பிடிப்போம்! இடதுசாரிகள் பொதுமடை சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நாளில் உறுதி ஏற்பு!!* தஞ்சாவூர் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக உயிர்நீத்த தமிழ்நாட்டின் மொழிப்போர் மறவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சாம்பான் தலைமை வகித்தார். இடதுசாரிகள் பொதுமடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்பிர மணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, . தமிழ் தேச மக்கள் முன்னணி மாநகர செயலாளர் ஆலம்கான், அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் எஸ்.தாமரைச் செல்வன், டி. தங்கராசு, டி.கஸ்தூரி, மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன். தங்கவேல், கட்டுமான சங்க நிர்வாகிகள் எஸ்.குணசேகரன், பி.செல்வம் நுகர் பொருள் வாணிபக் கழக நிர்வாகிகள் எஸ்.தியாகராஜன், நாடிமுத்து,பழைய பேருந்து நிலைய ஆட்டோ சங்க நிர்வாகிகள் எம்.சிவானந்தம்,. ஆர்.பழனி மாணிக்கம், விஜயகுமார்,சமூக ஆர்வலர்கள் விசிறி சாமியார் முருகன், கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் தமிழை, தமிழ் வழிக் கல்வியை அழிக்கின்ற இந்து மற்றும் சமஸ்கிருத மொழிகளை தமிழ்நாட்டில் இருந்து விரட்டி அடிப்போம், குழந்தைகள் முதல் கடைகள், சாலைகள் வரை தமிழில் பெயர் வைப்போம்,ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழிலேயே படிப்போம், மருத்துவம் மற்றும் உயர் கல்வி பயில்வதற்கான நீட் உள்ளிட்ட உயர்கல்வி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும், பொது பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும், தமிழ்நாட்டின் ஆட்சி மொழி, அலுவல் மொழி, உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழ் மொழியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டின் பண்பாட்டு, கலாச்சாரத்தை, தாய்மொழித் தமிழை உயர்த்தி பிடிப்போம் என்ற கோரிக்கைகள் உறுதியேற்க்கப் பட்டது.

No comments:
Post a Comment