தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கத்தின் புதிய கிளை திறப்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 24 June 2024

தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கத்தின் புதிய கிளை திறப்பு


தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கத்தின் புதிய கிளை திறப்பு 


பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கத்தின் புதிய கிளை துவங்கப்பட்டது.


மாவட்ட அமைப்பு செயலாளர் புவனேசன் அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் மாநில தலைவர் சி.மாயாண்டி அவர்கள் சங்க கொடியேற்றி பெயர்பலகை திறந்து வைத்தார்.


    திருவள்ளூர் கோவை திருச்சி தஞ்சாவூர் அரியலூர் சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி பகுதி,2  தஞ்சாவூர் பகுதி 1, 2 அம்மாபேட்டை ஒரத்தநாடு பகுதி1,2 பாபநாசம் கட்டயங்காடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள் 


நிகழ்வில் பேராவூரணி கிளை நிர்வாகிகளாக D. செல்வராசு அவர்களை கிளை தலைவராகவும்  C. சண்முகம் அவர்களை கிளை செயலாளராகவும்  R. மாரிமுத்து அவர்களை கிளை பொருளாளராகவும்  C. மணியரசன் அவர்களை துணைத் தலைவராகவும் S. ராஜேந்திரன் அவர்களை துணை செயலாளராகவும் சங்கத்தின் மாநில தலைவர் அவர்களால் பொறுப்புகள் வழங்கப்பட்டது.


   தமிழகத்தில் அரசு சாரா மின் பணியாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசிற்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


   மேலும் அனைவரும்  அரசு வழங்கும் வாரிய அட்டை பதிவு செய்யப்பட வேண்டும்.


   அனைவரும் மின் உரிமம் பெற்று மின் பணி செய்ய வேண்டும்.


    தமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்துகின்ற எச் மின் உரிமம் தகுதிக்கான தேர்வை வருடந்தோறும் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad