பேராவூரணியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
பேராவூரணி, மே. 4 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் திமுக சார்பில், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது.தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை அறிவுறுத்தலின்படி பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபம் நுழைவாயில் முன்பாக திமுக சார்பில் தண்ணீர் பந்தலை பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி நீர்மோர் வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் தலைமை வகித்தார்.பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பேராவூரணி நகரக் கழக செயலாளர் சேகர், ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,திமுக நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர்மோர், சர்பத், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment