காவு வாங்க காத்திருக்கும் சாலையோர பள்ளம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 3 May 2024

காவு வாங்க காத்திருக்கும் சாலையோர பள்ளம்

 


காவு வாங்க காத்திருக்கும் சாலையோர பள்ளம்


பேராவூரணி மே 4 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூக் கொல்லை பகுதியை சேர்ந்த ரெகுநாதபுரம் பகுதியில் ஆத்தாளுர் கிராமத்தை சேர்ந்த கோட்டை குளம் உள்ளது இதன் வடிகால் வாய்க்கால் ரெகுநாதபுரம் நாடகாடு பிரிவு சாலையில் பட்டுக்கோட்டை சாலை குறுக்கே செல்கிறது. இந்நிலையில் இந்த சாலையின் ஓரங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் சாலை இருபுறமும் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் இப்பகுதியிலுள்ளவர்கள் மற்றும் பட்டுக்கோட்டை செல்வோர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர் மேலும் அரசு பஸ் . தனியார் பஸ் மற்றும் இதர வாகனங்கள் சென்று வருகின்றன எனவே சாலையோரத்தில் உள்ள பள்ளத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாக இப்பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். எனவே பெரிய அளவில் விபத்துக்கள் நடந்து உயிர் சேதம் ஏற்படும் முன்பே இது சம்மந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு இதை சரி செய்ய வேண்டும் என இப்பகுதியில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad