அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் குழுவினர் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறித்து ஆலோசனைகள் வழங்கினர். முகாமில் 473 பேருக்கு பரிசோதனை செய்து 27 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்காக 276 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் 111 நபர்கள் இன்று மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மீதமுள்ள165 நபர்கள் மே 2 ந் தேதி வியாழக்கிழமை அன்று அனுப்பி வைக்கப்படுவார்கள். கடந்த மாதம் அறுவை சிகிச்சைக்கு உள்ளான 298 பேருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு 185 பேருக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.
நிதி உதவி அளித்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் சேவையாற்றிய அரிமாக்களுக்கும் லியோ பிள்ளைகளுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என என லயன் இன்ஜினியர் மற்றும் கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் தலைவர் சு. கண்ணன் கூறினார்.
No comments:
Post a Comment