பேராவூரணியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 27 April 2024

பேராவூரணியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 


பேராவூரணியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு


பேராவூரணி, ஏப்.27 -தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.


தமிழகத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, பேராவூரணி கடைவீதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு, அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம்.எஸ். நீலகண்டன் வரவேற்றார். பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் உ.துரைமாணிக்கம், கோவி.இளங்கோ, கே.எஸ்.அருணாசலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு பழம், நீர்மோர், பானாக்கம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. 3மாத காலம் தண்ணீர் பந்தல் இயங்கும் என அதிமுகவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad