தஞ்சைமாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப் பள்ளியில், பெரம்பலூர், சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை, பேராவூரணி கோக்கனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், சபரி ப்னெக்ஸ் பிரிண்டர்ஸ், நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை இணைத்து, இதய மருத்துவம் மற்றும் பொது மருத்துவ சிறப்பு முகாம் நடத்தினர்.
முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் ஏ.எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். சாசனத் தலைவர் எம்.நீலகண்டன், மண்டலத் தலைவர் எஸ். பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மருத்துவர்கள் இஜாஸ்அகமது, பிரகாஷ், வெங்கடேஷ் மற்றும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment