இதில், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் இளங்கோ, சேக்இப்ராம்சா, காங்கிரஸ் கட்சி விவசாயிகள் சங்கம் கமால் பாட்ஷா, திராவிடர் விடுதலைக்கழக அமைப்பாளர் சித.திருவேங்கடம், சிஐடியு மீனவர் சங்கம் பெரியண்ணன், நாகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்கம் குமாரசாமி, சேகர், இளங்கோ, விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஜாக்குலின் மேரி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் சிதம்பரம், செந்தில்குமார், சிஐடியு நீலமோகன், தென்னை விவசாயிகள் சங்கம் ஆர்.எஸ்.வேலுச்சாமி, கோ.ராமசாமி உள்ளிட்ட 58 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு விவசாயிகள் சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ரயில் நிலையம் அருகில் மாவட்ட துணை செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment