பல முனிவர்கள் செய்த தவத்தினாலேயே நமக்கு பாரத பிரதமர் கிடைத்துள்ளார். பிரதமரின் தவத்தினால் தான் உலகமே வியக்கும் வண்ணம் அயோத்தியில் ராமர் கோயில் எழுந்துள்ளது என தருமபுர ஆதீனம் புகழாரம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 1 December 2023

பல முனிவர்கள் செய்த தவத்தினாலேயே நமக்கு பாரத பிரதமர் கிடைத்துள்ளார். பிரதமரின் தவத்தினால் தான் உலகமே வியக்கும் வண்ணம் அயோத்தியில் ராமர் கோயில் எழுந்துள்ளது என தருமபுர ஆதீனம் புகழாரம்.


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சைவ ஆதீனங்களில் ஒன்றான திருக்கயிலாய பரம்பரை தருமைபுரம் ஆதீனம் கட்டளை மடம் திறப்பு விழா நடந்தது. தருமபுர ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆதீன கட்டளை மடத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து மடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆதீன குரு முதல்வர் மற்றும் 26 ஆவது குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவி பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் உலகமே வியக்கும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் ஜாதி மதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் வழிபட ஏதுவாக ராமர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் உள்ளிட்ட பல இதிகாச நூல்களில் ராமர் வழிபாடு குறித்து நற்செய்திகள் இடம் பெற்றுள்ளன மேலும் வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் நூலில் ராமர் வழிபாடு குறித்தும் இடம் பெற்றுள்ளது எனவும் பல தவ முனிவர்கள் தவம் செய்ததன் புண்ணியமே நமக்கு இத்தகைய பாரத பிரதமர் கிடைத்துள்ளார் எனவும் பாரத பிரதமரின் தவத்தினால் தான் உலகமே வியக்கும் வண்ணம் வருகிற ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோயில் எழுந்துள்ளது எனவும் மண்ணினால் கோயில் கட்டினால் 10 கோடி ஆண்டு கயிலாயத்தில் வாழலாம் செங்கல்லால் கோயில் கட்டினால் 100 கோடி ஆண்டு கயிலாயத்தில் வாழலாம் கருங்கல்லால் கோயில் கட்டினால் கயிலாயத்தை விட்டு அகலார் எனும் தனி பாடலுக்கு இணங்க கருங்கல்லால் கோயில் கட்டிய பாரதப் பிரதமர் இந்த கயிலாயத்தை விட்டு அகலார் எனவும் அவருக்கு ஞானசம்பந்தரின் திருவருள் கிடைக்க ஆசீர்வாதம் எனவும் கூறினார்.


செய்தியாளர் விக்னேஷ். 

No comments:

Post a Comment

Post Top Ad