இயற்கையோடு போராடி ஆழ்குழாய் கிணறு மூலம் சம்பா சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு சம்பா தொகுப்பு திட்டத்தை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், மேட்டூர் அணையின் முடிவில் சம்பா/தாளடி நடவுப் பணிகளை மேற்கொள்ளும் மற்றும் சிறு விவசாயிகளுக்கு நேரடி விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலம் இலவசமாக உழவு செய்து தர கேட்டுக்கொள்கிறேன்.
தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதிகளில் இரவு பகலாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக ரெட்டிபாளையம் ரோடு, சீனிவாசபுரம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பிள்ளையார்பட்டி ரவுண்டானா அருகே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கூட, மாடுகள் சுற்றித்திரிகின்றன. மாடுகளை பிடிக்க வாகனம், மாடுகளை அடைக்க தங்குமிடங்கள் மற்றும் மாடுகளை கட்டாதவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என மேயர் அறிவித்துள்ளார். எனவே, மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து காப்பகத்தில் அடைத்து மாடு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தஞ்சாவூர் சோழகலை மன்றம் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், காவல் துறை உதவி ஆய்வாளர் ஆகியோருக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து வருவதால், வரும் டிசம்பரில் நமது விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க வருமாறு எங்கள் கோட்ட நீதிபதி வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார்
- தஞ்சாவூர் செய்தியாளர் ஏசுராஜ்
No comments:
Post a Comment