தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் நேற்று இரவு வரை இடைவிடாது பரவலாக மழை பெய்தது மழையின் காரணமாக திருவிடைமருதூர் தாலுகாவில் ஐந்து கூரை வீடுகள் இரண்டு ஓட்டு வீடுகள் உட்பட ஏழு வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
அணைக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வடகிழக்கு பருவமழை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது வடகிழக்கு பருவமழை சிறப்பு அதிகாரியான ஆனந்த் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பள்ளி குழந்தைகளிடம் தீபாவளி பண்டிகை குறித்து கேட்டறிந்தனர் அப்போது அதிகாரிகளிடம் பள்ளி குழந்தைகள் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியதாகவும் மேலும் காலை உணவு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது எனவும் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
தொடர்ந்து மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இன்று காலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment