தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் விண்ணை முட்டும் விலைவாசியை கட்டுப்படுத்தவும் சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை கொடு. நூறு நாள் வேலையை முழுமையாக வழங்கு மற்றும் கேஸ் விலையை கட்டுப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பேராவூரணி அண்ணா சிலை அருகில் இருந்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமையில் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊர்வலமாக புறப்பட்டு பேராவூரணி தபால் நிலையம் முன்பாக மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.இந்நிலையில்போராட்டத்தில் ஈடுப்பட்ட பெண்கள் உள்ளிட்ட 63 பேர்களை பேராவூரணி போலிசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்
- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment