மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 26 July 2023

மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.


மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும், வழக்குகள் போட்டு ராகுல் காந்தியை முடக்க நினைக்கும் பாஜக அரசை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரத்தை பற்றி பேச மறுக்கும் மோடிக்கு கண்டனம் தெரிவித்தும், பேராவூரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில், கொட்டும் மழையிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆர். சிங்காரம் தலைமை வகித்தார். சிறுபான்மைத்துறை மாவட்டத் தலைவர் ஏ.நாகூர் கனி, வட்டாரத் தலைவர்கள் வி.எஸ். இளங்கோ, சேக் இப்ராம்ஷா, வெங்கடாசலம், தூண்டி அய்யப்பன், நகரத் தலைவர் பொன். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மாவட்ட பொறுப்பாளர்கள் கே.வி.கிருஷ்ணன், கே.எஸ். ரவிச்சந்திரன், ஏ.சி.சி.மாரிமுத்து, சி.முத்துக்குமாரசாமி, சிறுபான்மைத்துறை வட்டாரத் தலைவர் அஜிஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணாமலை, எம்.பெத்தையன், குருவிக்கரம்பை சம்பத், கவுன்சிலர் பழனியம்மாள் நீலமேகம் உள்ளிட்ட 67 பேர் கலந்துகொண்டு, மத்திய அரசையும் மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


- செய்தியாளர் த.நீலகண்டன். 

No comments:

Post a Comment

Post Top Ad