தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் சுந்தரம் இவர் தனியார் வங்கியில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகிறார். இயற்கையின் மேல் ஆர்வம் கொண்ட இவர் 40 ஆண்டாக மரம் நடும் வேலையை செய்து வருகிறார். கோவில் குளக்கரைகள். பள்ளி மைதானம். மற்றும் ஆற்றுக்கரை குளத்துக்கரைகளில் மகிழ மரம். சென்பக மரம். நாகலிங்கமரம். மற்றும் பல வகையான மருத்துவ குணம் கொண்ட மரங்கலையும் இவர் நட்டு வருகிறார்.
இந்நிலையில் பேராவூரணி அருகே உள்ள பொன்னாங்கண்ணிக் காடு மாயம்பெருமாள் கோவில் பொங்கள் திடலில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்த மரக்கன்றுகளை வி.என்.பக்கிரிசாமி நடவு செய்தார், உடன் வீ.அ.சண்முகம்.ரெ.சண்முகம்.சி.கோ.செந்தில். இயற்கை ஆர்வலர் க. விஜய் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன்.
No comments:
Post a Comment