காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீதான எம்பி பதிவு பறிப்பு வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை, கண்டித்தும் தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில பொதுகுழு உறுப்பின் ஏ. ஜேம்ஸ் தலைமை வாங்கினார்.
துணைத் தலைவர் க.லெட்சுமிநாரயணன், ஐ என் டி யு சி மாவட்ட தலைவர் சுப்பு ,தங்கராசு, செயலாளர் டி.இயேசு, பொது செயலாளார் ஏ செந்தில் சிவக்குமார், துணை தலைவர்கள் கோவி மோகன், ஏ. வடிவேல், அருண் சுபாஷ் ஆகியோர் முன்னிலையில், வகித்தனர், எஸ் .ஆர் சரவணன், வல்லம் கெளரிசங்கர் மார்கெட் செல்வராஜ், சிதாராமன், இன்ஜினியர் நாராயணன், இரா செல்வம், மாநகர மாவட்ட பொருளாளர் ஆர்.பழனியப்பன் ஆகியோர் ரயில் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment