ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்; தஞ்சை திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 9 April 2023

ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம்; தஞ்சை திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை.


தஞ்சையில் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி தத்ரூபமாக இயேசு உயிர்த்தெழும் காட்சி - மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பிரார்த்தனை, ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி, தஞ்சாவூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் நேற்று இரவு ஏசு உயிர்ப்பு பெருநாள் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. திரு இதய ஆண்டவர் பேராலயத்தில்  ஈஸ்டர் திருநாள் நடைபெற்ற திருப்பலி தொடக்கத்தில் பாஸ்கா திருவிழிப்புசடங்கு நடந்தது. இதில் ஏசு உயிர்த்தெழுவதை உணர்த்தும் வகையில் ‘‘பாஸ்காஒளி’’ யை தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்திரு எல்.சகாயராஜ்  ஏற்றிவைத்தார்.

பேராலய முகப்பு மேடை வளாகத்தின் மையப்பகுதியில் இருந்து ஏற்றப்பட்ட பாஸ்கா ஒளியை பேராலய பாதிரியார்கள் முகப்பு மேடைக்கு எடுத்து சென்றார். அதனைத் தொடர்ந்து பிரார்த்தனைகள் தொடங்கின. இதில்  பல்லாயிரகணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


இரவு 12 மணிஅளவில் வாணவேடிக்கை, மின்னொளி அலங்காரத்துடன் பேராலய கலையரங்கத்தின் மேற்கூரையில் சிலுவைகொடியை கையில் தாங்கிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் காட்சி தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர் மறைமாவட்ட பரிபாலகர் பேரருட்திரு எல்.சகாயராஜ்   தலைமையில் சிறப்புதிருப்பலி நடைபெற்றது. இதில் மறைவட்ட அதிபர் பேரருட்திரு.ஏ.ஏம்.என் பிரபாகர், ஆயர் செயலாளர் அருட்திரு. ஆண்ட்ரு , உதவிப் பங்கு தந்தை பிரவின்  திருத்தொண்டர் அரவிந்த்  உள்ளிட்ட அருட்சகோதரிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad