தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த மாநகர வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொழுதுபோக்கு பூங்கா, பேருந்து நிலையம், குடிநீர் விநியோகம், அங்கன்வாடி மையம் மேம்படுத்துதல், குளங்கள் பாதுகாப்பு, புதிய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட 103 பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. 966.62 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி.
மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் மக்கள் பயன்பாட்டுக்கு விரைவாகவும், தரமாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. உத்தரவிட்டார்.
மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்புபதி, கமிஷனர் சரவணக்குமார் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்
செய்தியாளர்: இரா. ஏசுராஜ்

No comments:
Post a Comment