தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை பொது மேலாளர் பாலமுருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகையில், சாதி, மத, மொழி பேதமின்றி நாம் அனைவரும் இந்தியன் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார்.
மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் சரவணவேல், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. குடியரசு தினத்தையொட்டி, சலுகைக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

No comments:
Post a Comment