இந்நிகழ்வுக்கு விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர், அ.யோகராஜ் தலைமை வகித்தார், மாவட்ட செய்தி தொடர்பாளர் பவுன் அந்தோணி, துரை. அப்பாஸ், பசுபதி, துரை இத்திரிஸ், ஜே.பி. பவுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை மைய மாவட்ட செயலாளர், கோ. ஜெய்சங்கர், மேதின கொடியினை ஏற்றி சிறப்புரையாற்றினார்.
இந்த மே தின நிகழ்வில், சமூக நல்லிணக்கப் பேரவை மாநிலத் துணைச் செயலாளர் சிவா. தமிழ் நிதி, முன்னாள் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் தமிழ் முதல்வன், இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் சுரேந்தர், தஞ்சை தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள்: விளார் பாஸ்கர், குருங்குளம் முருகானந்தம், சந்திரசேகர், ஒன்றிய துணை செயலாளர் முற்போக்கு மாணவர் கழகம் திருமேனி, கரந்தை பெனிட், வெற்றி அரசன், திருவோணம் ரங்கசாமி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடைபெற்ற இந்த நிகழ்வில் மாற்று சமூகத்தைச் சார்ந்த கரந்தை கார்த்திகேயன் தன்னை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்ட அவருக்கு தஞ்சை மைய மாவட்ட செயலாளர், கோ. ஜெய்சங்கர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தபின் அனைவருக்கும், மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment