கும்பகோணம் தனியார் ஹோட்டலில் இன்னர் வீல் கும்பகோணம் டெல்டா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி இன்னர் வீல் கிளப் உபதலைவி செல்வி இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக மணிமேகலை ராஜேந்திரன், செயலாளராக உஷா புகழேந்திரன், காசாளராக லட்சுமி பிரபாகரன், ஐஎஸ்ஓ இந்திராணி கிருஷ்ணன், எடிட்டர் ஆக சந்திரா கல்யாணம் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மேலும் பிற உறுப்பினர்களின் அறிமுகமும் நடைபெற்றது. சங்கத்தின் சார்பாக மருத்துவர் கௌரி, மருத்துவர் தனலட்சுமி, மருத்துவர் சொர்ணலதா ஆகியோருக்கு மருத்துவர் தினம் சார்பாக கௌரவிக்கப்பட்டனர். பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் மற்றும் உளவியல் நிபுணர் சிந்து மேனகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சங்கச் செயலர் உஷா புகழேந்தி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment